- நெல்லை மற்றும்
- கோயம்புத்தூர்
- ராகுல் காந்தி
- நெல்லை
- நெல்லை மற்றும் கோவை
- முதல் அமைச்சர்
- ஸ்டாலின்
- இந்தியா கூட்டணி
- மு.கே ஸ்டாலின்
- நெல்லா மற்றும்
- தின மலர்
நெல்லை: ராகுல்காந்தி வருகையை ஒட்டி நெல்லை மற்றும் கோவையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு சாலையின் இருபுறங்களிலும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், ராகுல்காந்தி கூட்டாக பிரச்சாரம்
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இன்று கூட்டாக பிரச்சாரம் செய்கின்றனர். செட்டிபாளையத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இன்று உரையாற்ற உள்ளனர்.
பாளையங்கோட்டையில் ராகுல்காந்தி இன்று பிரச்சாரம்
நெல்லை பாளையங்கோட்டையில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் தொகுதி காங்கிரஸ். கூட்டணி வேட்பாளர்களுக்கு ராகுல் வாக்கு சேகரிக்கிறார். நெல்லை வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழியும் ராகுல்காந்தி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கன்னியாகுமரி வேட்பாளர் விஜய் வசந்த், விருதுநகர் வேட்பாளர் மாணிக்கம் தாகூரும் தெல்லை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். திருவனந்தபுரத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் பிற்பகல் 3.50 மணிக்கு ராகுல்காந்தி பாளையங்கோட்டை வருகிறார். ராகுல்காந்தியின் ஹெலிகாப்டர் இறங்க பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளி திடலில் பிரத்யே ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி வருகை – பாதுகாப்பு அதிகரிப்பு
ராகுல்காந்தி வருகையை ஒட்டி நெல்லை மற்றும் கோவையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி செல்லும் சாலையின் இருபுறங்களிலும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்பு கம்புகள் கட்டப்பட்டுள்ளன.
The post ராகுல்காந்தி வருகையை ஒட்டி நெல்லை மற்றும் கோவையில் போலீஸ் பாதுகாப்பு: சாலையின் இருபுறங்களிலும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்பு கம்புகள் அமைப்பு appeared first on Dinakaran.